மாத்திரை எடுத்துக்காட்டு
உயிரெழுத்து (குறில்) - ஒரு மாத்திரை
உயிரெழுத்து (நெடில்) - இரு மாத்திரை
உயிர்மெய் (குறில்) - ஒரு மாத்திரை
உயிர்மெய் (நெடில்) - இரு மாத்திரை
குறில் மாத்திரை அளவு - 1 மாத்திரை (எ.கா: அ, இ, ப, கி, மு)
நெடில் மாத்திரை அளவு - 2 மாத்திரை (எ.கா: ஆ, ஈ, ஏ, கா, வா, போ)
மெய் எழுத்துகள், சார்பெழுத்துகள் மாத்திரை அளவு - அரை மாத்திரை
குற்றியலிகரம், குற்றியலுகரம் மாத்திரை அளவு - அரை மாத்திரை
அளபெடை எழுத்துகளின் மாத்திரை - இரண்டிற்கு மேல்
' ஐ' மாத்திரை அளவு - 2
ஐகாரக்குறுக்கம் மாத்திரை அளவு - ஒரு மாத்திரை, ஒன்றரை மாத்திரை
'ஔ' மாத்திரை அளவு - 2
ஒளகாரக்குறுக்கம் மாத்திரை அளவு - ஒன்றரை மாத்திரை
'ம்' மாத்திரை அளவு - அரை மாத்திரை
மகரக்குறுக்கம் மாத்திரை அளவு - கால் மாத்திரை
ஆய்த எழுத்து 'ஃ' மாத்திரை அளவு - அரை மாத்திரை
ஆய்தக்குறுக்கம் மாத்திரை அளவு - கால் மாத்திரை
உயிரளபெடை மாத்திரை - இரண்டிற்கு மேல் வரும்.
ஒற்றளபெடை மாத்திரை - இரண்டிற்கு மேல் வரும்.
குறில்
ஒலிப்பதற்கு ஒரு மாத்திரை அல்லது ஒரு வினாடி எடுத்துக் கொள்ளும் எழுத்துகள் குறில் என்று அழைக்கப்படும்.
குறில் உயிர் எழுத்துகள் அ, இ, உ, எ, ஒ
என்பன.
நெடில்
ஒரு எழுத்து தான் ஒலிக்க இரண்டு வினாடிகள் எடுத்துக் கொண்டால் அது நெடில் என்று அழைக்கப்படும். ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஒள ஆகியவை நெடில் எழுத்துகள் ஆகும்
ஒற்று
ஒலிப்பதற்கு அரை மாத்திரை நேரமே எடுக்கும் எழுத்துகள் ஒற்று என்று அழைக்கப்படுகிறன.”ஃ
” ஒற்று ஆகும்
உயிர்மெய் எழுத்துக்கள்
தமிழ் மொழியிலே உயிர் ஒலிகளைக் குறிக்கத் தனி எழுத்துக்களும் மெய் ஒலிகளைக் குறிக்கத் தனி எழுத்துக்களும் உள்ளன. இவற்றை மேலுள்ள விளக்கத்தின் மூலமாக அவதானித்தோம். இவ்வாறான உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களும் சேர்ந்து கூட்டு ஒலிகளாக புதிய ஒலிகளைத் தருகின்றன. அவற்றையே உயிர்மெய் எழுத்துக்கள் என அழைக்கின்றறோம். உயிர்மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை 216 ஆகும்.
உதாரணம்
க் + அ = க
த் + உ = து
உயிர்மெய் எழுத்துக்கள் இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டு உயிர்மெய் குறில் எழுத்துக்கள் என்றும் உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் என்றும் இரு நோக்கப்படுகிறது.
உயிர்மெய் குறில் எழுத்துக்கள்
குறுகிய ஓசையை உடைய உயிர் எழுத்துக்கள் ஐந்தும் மெய் எழுத்துக்களாகிய 18 எழுத்துக்களுடன் இணைவதால் உருவாகும் எழுத்துக்களே உயிர்மெய் குறில் எழுத்துக்கள் எனப்படுகின்றன. உயிர்மெய் குறில் எழுத்துக்களுக்கு மாத்திரை அளவு 01 ஆகும்.. தமிழில் 90 உயிர்மெய் குறில் எழுத்துக்கள் காணப்படுகின்றன. உதாரணமாக இங்கு தமிழ் நெடுங்கணக்கின் ககர வரிசையை நோக்குவோம்.
அ, இ, உ, எ, ஒ
க் க , கி, கு, கெ, கொ
இங்கு அ, இ, உ, எ, ஒ போன்ற உயிர் எழுத்துக்களுடன் க் என்ற மெய் எழுத்து இணைவதால் க , கி, கு, கெ, கொ போன்ற ககர வரிசையின் உயிர்மெய் குறில் எழுத்துக்கள் உருவாக்கம் பெற்றிருக்கின்றன.
உயிர்மெய் நெடில் எழுத்துக்கள்
நீண்ட ஓசையை உடைய உயிர் எழுத்துக்கள் ஏழும் மெய் எழுத்துக்களாகிய 18 எழுத்துக்களுடன் இணைவதால் உருவாகும் எழுத்துக்களே உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் எனப்படுகின்றன. உயிர்மெய் நெடில் எழுத்துக்களுக்கு மாத்திரை அளவு 02 ஆகும்.. தமிழில் 126 உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் காணப்படுகின்றன. உதாரணமாக இங்கு தமிழ் நெடுங்கணக்கின் ககர வரிசையை நோக்குவோம்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள
க் கா, கீ, கூ, கே, கை, கோ, கௌ
இங்கு ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள போன்ற உயிர் எழுத்துக்களுடன் க் என்ற மெய் எழுத்து இணைவதால் கா, கீ, கூ, கே, கை, கோ, கௌ போன்ற ககர வரிசையின் உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் உருவாக்கம் பெற்றிருக்கின்றன.
ஆய்த எழுத்து
முக்கோண அமைப்பிலுள்ள மூன்று புள்ளி கொண்ட எழுத்து ஆய்த (ஆய்தம்) எழுத்து எனப்படுகிறது. ஆய்த எழுத்தானது தனிக் குற்றெழுத்துக்கும் வல்லினத்துக்கும் இடையே ஆய்தம் வரும் என இலக்கண நூல்கள் கூறுகின்றன. ஆய்த எழுத்து மெய் எழுத்தைப் போன்று ஒலிப்பதனால் இதற்கும் மாத்திரை 1/2 (அரை மாத்திரை) ஆகும்.
உதாரணம் - ஃ
அஃது, இஃது, அஃறிணை, எஃகு
மேற்படி சொற்களில் முதல் எழுத்துக்களான அ, இ, எ போன்றன குறில் எழுத்துக்களாகும். து, றி, கு என்பன வல்லின மெய்களைக்கொண்ட எழுத்துக்களாகும். ஆகவே குறில் எழுத்துக்களுக்கும் வல்லின மெய் எழுத்துக்களுக்கும் இடையே ஆய்தம் செயற்படுவதை அவதானிக்கலாம்.
தமிழில் எழுத்தானது இரண்டு வகைப்படும். அவை முதலெழுத்து, சார்பெழுத்து ஆகும்.சார்பு எழுத்துக்கள் என்றால் முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள் ஆகும்.
சார்பு எழுத்துக்கள் வகைகள் மொத்தம் - பத்து
அவையாவன,
உயிர்மெய்
ஆய்தம்
உயிரளபெடை
ஒற்றளபெடை
குற்றியலிகரம்
குற்றியலுகரம்
ஐகாரக்குறுக்கம்
ஔகாரக்குறுக்கம்
மகரக்குறுக்கம்
ஆய்தக்குறுக்கம்
No comments:
Post a Comment
THANKS FOR READING MY POSTS. FOLLOW MY BLOG AND SHARE YOUR FRIENDS